ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சென்னை சாஸ்திரி பவனில் தணிக்கை குழு தலைவர் மதியழகனை, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷால்...
"இன்றைய சூழலில் தமிழ் திரைப்படங்களுக்கான தணிக்கை சான்றிதழ் பெறுவதை எளிமை படுத்த வேண்டும். திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரம் முன்னர் தணிக்கை சான்றிதழுக்கு அனுப்புவதால் தான் படங்கள் ரிலிஸ் தேதியை விட்டு தள்ளிப்போகின்றன. படத்தின் ரிலிஸ் தேதிக்கு ஒரு மாதம் அல்லது அதற்கு முன்னதாகவே தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைத்தால் மட்டுமே திரைப்படம் வெளியாகும் போது எந்தவித தடங்களும் ஏற்படாது. இது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
ஜி.எஸ்.டி காரணமாக தமிழ்திரையுலகம் இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது, இது சினிமா துறைக்கு பெறும் இழப்பு. ஜிஎஸ்டியை குறைக்க வலியுறுத்தி நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு நடிகர் கமல் கையெழுத்திட்ட கடிதமும் அனுப்பட்டுள்ளது".
இவ்வாறு விஷால் தெரிவித்தார்.