ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'பாகுபலி' படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டும் வெளிவந்து சுமார் 2500 கோடி வரை வசூலித்து இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு பாகங்களையும் பெரிய அளவில் எந்த ஒரு சர்ச்சையும் இல்லாமல் வெளியிட்டு தெலுங்குத் திரையுலகத்தைப் பற்றி பெரிய அளவில் பேச வைத்ததில் ராஜமௌலி ஒரு சாதனையாளராகவே இன்று வரை தெரிகிறார்.
ஆனால், சில தினங்களுக்கு முன் தான் அளித்த பேட்டியின் மூலம் ஒரு சர்ச்சை வளையத்திற்குள் ராஜமௌலியை சிக்க வைத்துவிட்டார் ஸ்ரீதேவி. ராஜமௌலி மீது மிகப் பெரிய மரியாதை வைத்திருந்தேன், அவர் என்னைப் பற்றி தவறானத் தகவலை எப்படி பேட்டியில் கூறலாம் என்ற ரீதியில் ஸ்ரீதேவி அளித்த பேட்டி தெலுங்குத் திரையுலகில் தற்போது புகைய ஆரம்பித்துவிட்டது.
தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் ஸ்ரீதேவி நடித்திருந்தாலும், ராஜமௌலி நான் சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லியிருக்கிறார் என்றே ஸ்ரீதேவி அவருடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி 'பாகுபலி' படத்தில் நடிக்க அப்படி 'டிமான்ட்' செய்தாரா இல்லையா என்பதைப் பற்றி தக்க ஆதாரங்களுடன் ராஜமௌலி சொன்னால் மட்டுமே இந்த சிறிய கறை அவரை விட்டு விலகும். அதுவரை, ஆளுக்கொரு விதமாக கமெண்ட் அடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.