ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பிவிஆர் சினிமா சென்னை விமான நிலையம் அருகில் பிவிஆர் சினிபிளெக்ஸ் என்ற தியேட்டர் வளாகத்தை திறந்துள்ளது. இதில் 5 திரையரங்குகள் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து படம் பார்க்கலாம். இதனை தொடங்கி வைத்து நடிகர் அர்ஜுன் பேசியதாவது:
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளேன். இந்த திரையரங்குகளில் ஒளி, ஒலி நுட்பத்தை கண்டு வியப்படைந்தேன். புதிய திரையரங்கங்கள் தொடங்குவது சினிமாவின் வளர்ச்சிக்கு பலம் சேர்த்து, திருட்டு சிடி மற்றும் சினிமாவை அழிக்க நினைக்கும் வேறு சில சக்திகளையும் கட்டுப்படுத்த பெருமளவு உதவும்.
இதற்காக திரையரங்குள் பெருக வேண்டும். எங்களது நிபுணன் வரும் ஜூலை 7 ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது . பெரும் உழைப்பையும் நம்பிக்கையையும் முதலீடு செய்து எடுத்துள்ள இப்படத்தை மக்கள் மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் அர்ஜுன்.
விழாவில் நடிகை வரலட்சுமி சரத்குமார், இயக்குனர் அருண் வைத்தியநாதன், பிவிஆர் சினிமாவின் தென்னிந்திய பொது மேலாளர் ராஜிந்தர் சிங், மார்க்கெட்டிங் தலைவர் மீனா சாபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.