ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்த் திரையுலகில் நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு படத்தின் படப்பிடிப்பு நடப்பது இதுவே முதல் முறையாக கூட இருக்கலாம். ஆம், கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது துருக்கி நாட்டில் நடந்து வருகிறது. 'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியானது.
முதல் பாகத்தின் படப்பிடிப்புடன் சேர்த்தே இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை 2012ம் ஆண்டிலேயே கமல்ஹாசன் முடித்துவிட்டார். முதல் பாகம் சில அரசியல் காரணங்களால் திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் வெளியாகாமல் ஒரு வாரம் கழித்துதான் வெளியானது. அதன்பின் அந்த ஆண்டின் கடைசியில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் தயாரிப்பாளருக்கும், கமல்ஹாசனுக்கும் இடையில் பிரச்சனை வந்ததால் இரண்டாம் பாகத்தின் வெளியீடு அப்படியே நின்று விட்டது.
சில வாரங்களுக்கு முன்புதான் அனைத்துப் பிரச்சனைகளும் பேசி முடிக்கப்பட்டன. அதன்பின் கமல்ஹாசன் தற்போது துருக்கி சென்று படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். பின் சென்னையில் சில காட்சிகள் படமானதும் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிடுகிறது. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.