விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
'பாகுபலி 2' படம் மாபெரும் வெற்றி பெற்று 1600 கோடியைத் தாண்டிய வசூலைப் பெற்றுவிட்டது. ஏறக்குறைய படத்தின் ஓட்டமும் முடிவுக்கு வர இருக்கிறது. ஆனாலும், படத்தைப் பற்றிய பல கேள்விகளை இன்னமும் சிலர் விடாமல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அதில் முக்கியமானது ஒரு கேள்வி, சிவகாமி கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்காததன் காரணம் என்ன ?.
சிவகாமி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து அவருடைய நடிப்பும் அனைவரின் பாராட்டையும் பெற்றுவிட்டது. ஸ்ரீதேவியே அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் கூட ரம்யா அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பாரா அல்லது அந்தக் கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமாக அமைந்திருக்குமா என்பதும் சந்தேகம்தான். அதற்குக் காரணம் விஜய் நடித்த 'புலி' கதாபாத்திரம். 'புலி' படம் பற்றியும், அந்தப் படத்தில் ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரம் பற்றியும் தெரியாத சில ஹிந்தி பத்திரிகையாளர்கள் இன்னமும் ஸ்ரீதேவியுடம் 'பாகுபலி 2' பற்றி ஸ்ரீதேவியும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சமீபத்தில் நடந்த 'மாம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அந்தக் கேள்விக்கு பதில் அளித்துவிட்டார் ஸ்ரீதேவி. “வேறு ஒருவர் நடித்து பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்று விட்டன. இன்னமும் அதைப் பற்றிப் பேசுவதால் என்ன பலன்,” என ஸ்ரீதேவி அந்தக் கேள்விகளுக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
'பாகுபலி 2' படத்தில் நடித்தவர்களே அடுத்த வேலைகளைப் பார்க்கப் போய்விட்ட பிறகு இன்னமும் 'பாகுபலி 2' பற்றி பேசுவதில் என்ன இருக்கிறது என ஸ்ரீதேவி நினைத்திருக்கலாம். அதானே...