கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது, ஜல்லிக்கட்டு விளையாட்டிற்குத் தடை விதிக்கக் காரணமாக இருந்த பீட்டா அமைப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக இருந்த நடிகர், நடிகைகளை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. த்ரிஷா உள்ளிட்ட சிலர் பீட்டாவிற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்தனர். ஆனாலும், இன்னமும் சிலர் பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதோடு அவர்களின் பிரச்சார விளம்பரங்களிலும் நடித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கத்தி படத் தயாரிப்பின் போது ஈழத் தமிழர்களுக்கு எதிரான தயாரிப்பு நிறுவனம் என லைக்கா நிறுவனத்திற்கு எதிராக குரல் எழுந்தது. அந்த நிறுவனம் சார்பாக இலங்கையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஒரு விழாவிற்கு ரஜினிகாந்த் செல்ல உள்ளார் என்ற அறிவிப்பு வந்ததும் ரஜினிக்கு எதிராகவும் குரல் எழுந்தது. அந்த நிறுவனம் தற்போது ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடிக்க ஷங்கர் தயாரிப்பில் 400 கோடி ரூபாய் செலவில் 2.0 படத்தைத் தயாரித்து வருகிறது.
2.0 படத்தின் நாயகியான எமி ஜாக்சன் தொடர்ந்து பீட்டாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், 2.0 பட வெளியீட்டின் போது மேலும் பிரச்சனைகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.