கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
அ.தி.மு.க., பேச்சாளரான, நடிகை விந்தியா நேற்று திடீரென, ஜெ., நினைவிடம் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. நடிகை விந்தியா, நேற்று மாலை, 6:00 மணிக்கு, நான்கு பெட்டி மாம்பழங்களுடன், ஜெ., நினைவிடம் வந்தார். மாம்பழங்களை நினைவிடத்தில் வைத்து வணங்கினார். பின் மாம்பழங்களை அங்கு இருந்தோருக்கு, வினியோகித்தார்.
பின், விந்தியா கூறியதாவது: நான் கட்சி ஆரம்பிக்க இங்கு வரவில்லை. ஆண்டுதோறும் எங்கள் தோட்டத்து மாம்பழத்தை, அவருக்கு வழங்குவது வழக்கம். தற்போது அவர் இங்கு இருப்பதால், வந்தேன். அவர் உடல் மண்ணுக்குள் இருக்கலாம். அவரது அன்பு, ஆட்சி, தமிழக மக்கள் மனதில் உள்ளது. நான் கொடுக்கும் மாம்பழம், மக்களுக்கு கொடுத்தால், அவருக்கு போய் சேரும்.
அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைவது நல்லது. நான் தற்போது, எந்த அணியிலும் இல்லை. ஜெ., இறப்பு என் தலையில், இடி விழுந்தது போல் இருந்தது. விரைவில், அ.தி.மு.க., பேச்சாளராகவும், அ.தி.மு.க., கட்சிக்காரியாகவும், வெளியில் வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.