ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சாட்டை படத்தில் யுவனுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை மகிமா நம்பியார். அதன்பிறகு ஓரிரு படங்களில் நடித்த அவருக்கு அந்த படங்கள் சரியான ரீச் கொடுக்கவில்லை. இருப்பினும், குற்றம்-23 படத்தின் ஹிட் காரணமாக தற்போது ஐங்கரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், கொடிவீரன் என மூன்று தமிழப்படங்களை கைப்பற்றி முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடிக்கும் தருவாயில் இருக்கிறார் மகிமா நம்பியார்.
இதுபற்றி அவர் கூறுகையில், எனக்கு அடுத்தடுத்து இத்தனை பெரிய நடிகர்களின் படங்கள் கிடைத்திருப்பதற்கு காரணம், குற்றம்-23 படம் தான். அந்த படத்தில் என்னை நம்பி நல்ல வேடத்தை கொடுத்தார் இயக்குனர் அறிவழகன். அதோடு கேமராமேன் என்னை ரொம்ப அழகாக காண்பித்திருந்தார். அந்த படத்தைப் பார்த்துதான் ஜி.வி.பிரகாஷின் ஐங்கரன் புக்கானது. அதன்பிறகு அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள், இப்போது சசிகுமாரின் கொடிவீரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இதுதவிர மலையாளத்தில் மம்மூட்டி யுடன் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறேன்.
இப்படி ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் எனக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்திருக்கிறது. அப்படி என் திறமை மீது நம்பிக்கை வைத்து கொடுத்த இயக்குனர்கள் ஒருவர்கூட என்னை கிளாமராக நடிக்க வேண்டும் என்று சொன்னதில்லை. ஹோம்லியான வேடங்களில் மட்டுமே நடிக்க வைத்துள்ளனர். அந்த வகையில, நான் ரொம்ப லக்கியாக உணர்கிறேன் என்கிறார் மகிமா நம்பியார்.