ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீதி சிங் மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் ஆரம்பமாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்படுவதாக சொல்லப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஐதராபாத்திலேயே நடந்தது. தமிழ்ப் படம் என்று சொல்ல வேண்டும் என்பதற்காக சில நாட்கள் மட்டும் சென்னையில் படப்பிடிப்பை நடத்தினார்கள்.
ஜுன் மாதம் 23ம் தேதி இப்படம் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், கிளைமாக்சை மாற்ற முருகதாஸ் திடீரென முடிவெடுத்ததாலும், 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு விஎப்எக்ஸ் காட்சிகளின் தரம் உயர்ந்ததாலும், படத்தை இன்னும் தரமாகக் கொடுக்க வேண்டும் என படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் என்கிறார்கள்.
சுமார் ஒரு வருட காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மகேஷ் பாபு நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'பிரம்மோற்சவம்' படம் தோல்வியடைந்ததையடுத்து 'ஸ்ரீமந்துடு' படத்தை விட பெரிய வெற்றியைத் தர வேண்டும் என மகேஷ்பாபு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி மாற்று அறிவிப்பு வெளியாகலாம்.