மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
'பாகுபலி, பாகுபலி 2' ஆகிய இரண்டு பாகங்களின் வெற்றி அடுத்தடுத்து பல இரு மொழிப் படங்கள் உருவாக காரணமாக அமைந்துவிட்டது. சுமார் 60 வருடங்களுக்கு முன்பு சென்னையில் தான் தென்னிந்திய மொழிப் படங்கள் அனைத்தும் தயாராகின. 90களில்தான் அந்தந்த மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தது.
அன்றைய கருப்பு, வெள்ளைக் காலங்களில் பெரும்பாலான படங்கள் தமிழ் மொழியில் உருவானால், உடனுக்குடன் தெலுங்கிலும் உருவானது. ஆனால், நடிகர்கள், நடிகைகள் வேறு வேறு இருப்பார்கள். இரண்டு மொழிப் படங்களுமே ஒரே மாதிரியான வெற்றியைப் பெற்றன. ரசிகர்களின் ரசனை ஒரே மாதிரியாகவே இருந்தது. தனித் தனி மாநிலங்களாக பிரிந்ததாலோ என்னவோ மொழி சார்ந்து மக்களின் ரசனையும் மாறிவிட்டது.
தெலுங்குப் படங்கள் என்றால் மசாலாப் படங்கள் என்றும், மலையாளப் படங்கள் என்றால் கிளாசிக் படங்கள் என்றும், தமிழ்ப் படங்கள் என்றால் இரண்டுக்கும் நடுவில் என்றும் அடையாளப்படுத்தப்பட்டன. கன்னடப் படங்கள் பெரிய தாக்கத்தை இன்று வரையிலும் ஏற்படுத்தவில்லை என்பது வேறு கதை.
'பாகுபலி' படங்களின் வெற்றி இப்போது பல புதிய படங்களை இரு மொழிப் படங்கள் எனச் சொல்லுமளவிற்கு உருவாகிறதோ இல்லையோ ஏமாற்றப்படுத்துகின்றன என்றே சொல்ல வேண்டும். 'பாகுபலி 2' படத்தின் அனைத்து காட்சிகளும் தமிழில் எடுக்கப்படவில்லை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும். ஆனாலும், அவர்கள் அதை மறுத்து தமிழிலும் எடுத்தோம் என்கிறார்கள்.
இந்த பாணியிலேயே தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரித்தோம் என 'ருத்ரமாதேவி' படத்தை வெளியிட்டார்கள். அடுத்து சில வாரங்களுக்கு முன்பு 'காஸி' படத்தை வெளியிட்டார்கள். இப்போது, மகேஷ்பாபு நடிக்க 'ஸ்பைடர்' படம் உருவாகி வருகிறது. பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' படத்தையும் தமிழ், தெலுங்கில் உருவாக்கி வருவதாகச் சொல்கிறார்கள். சிரஞ்சீவி அடுத்து நடிக்க உள்ள படத்தையும் தமிழ், தெலுங்கில் எடுக்கப் போகிறோம் என்கிறார்கள்.
ஹிந்தி, மலையாளம் ஆகியவற்றில் டப்பிங் செய்கிறோம் என்று சொல்பவர்கள் தமிழில் மட்டும் இரு மொழிகளில் எடுக்கிறோம் என்கிறார்கள். அனைவருக்கும் ஒரே கேள்விதான். நீங்கள் தமிழில் படமாக்கிய காட்சிகளின் 'ரஷ்'ஷை வெளியிடுவீர்களா ?. இனியும், தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுக்கிறோம் எனச் சொல்லி தமிழ் ரசிகர்களையும் சேர்த்து ஏமாற்றாதீர்கள்.