பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் |
சினிமாவில் ஒரு துறையில் சாதித்தவர்களுக்கு ஒரு கட்டத்தில் வேறு துறையில் ஈடுபட வேண்டும் என்ற நாட்டம் வருவது இயல்புதான். அதில் வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ.. சும்மா முயற்சித்து பார்ப்போம் என்று இறங்குவார்கள். கடந்த 25 வருடங்களாக திரை இசைத்துறையில் பல சாதனைகள் புரிந்த ஏ.ஆர்.ரஹ்மான், உச்சகட்டமாக ஆஸ்கர் விருதும் பெற்றார்.
இதற்கு மேல் இசையில் சாதிக்க ஏதுமில்லை என்று நினைத்தாரோ என்னவோ இயக்குநர் அவதாரம் எடுத்துவிட்டார். தற்போது அவர் இயக்கி வரும் படம் லீ மஸ்க். இந்த படத்தில் வெளிநாட்டு கலைஞர்கள் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ரோம் நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் Virtual Reality Technology என்ற நவீன தொழில்நுட்பமுறையில் இசை மற்றும் அழகியல் நிறைந்த காட்சி அமைப்புகளுடன் உருவாகி வருகிறது.
லீ மஸ்க் படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள் அடுத்தப் படத்தை இயக்கப்போவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது அடுத்த படத்தை VR movie based என்ற முறையில் இந்திய நடனம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.