ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தனது டுவிட்டரில் பிரபலங்கள் குறித்த எதிர்மறையான விமர்சனங்களை தொடர்ந்து வெளியிட்டு வருபவர் இயக்குனர் ராம்கோபால்வர்மா. சமீபத்தில் இயக்குனர் கே.விஸ்வநாத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப் பட்டபோது, தாதா சாகேப் பால்கே விருதை கே.விஸ்வநாத்துக்கு வழங்கியதைவிட, கே.விஸ்வநாத் விருதை தாதா சாகேப் பால்கேவுக்கு வழங்கியிருக்கலாம் என்று ஒரு கருத்தினை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்புகளும் எழுந்தது.
அதையடுத்து, ராஜமவுலியின் பாகுபலி-2 படம் வெளியானபோது அந்த படத்தை பாராட்டியிருந்தார். ஆனால், தற்போது பாகுபலி பட நாயகன் பிரபாஸை அவர் வழக்கம்போல் தனது பாணியில் கலாய்த்துள்ளார். அதாவது, பாகுபலி படத்தில் சிவகாமி வேடத்தில் ஸ்ரீதேவி மட்டும் நடித்திருந்தால் சிறப்பாக நடித்து பிரபாஸை ஓரங்கட்டியிருப்பார் என்று கூறியுள்ளார் ராம்கோபால்வர்மா.
இந்த படத்தில் சிவகாமி வேடத்திற்கு முதலில் ஸ்ரீதேவியிடம்தான் பேசினார் ராஜமவுலி. பின்னர் என்ன காரணமோ அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.