சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் துணிகரம். பாலசுதன் இயக்கி உள்ளா£ர். ஷான் கோகுல், தனுஜ்மேனன் இசை அமைத்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு கஸ்தூரிராஜா பேசியதாவது:
துணிகரம் என டைட்டில் வைத்ததிலேயே படக்குழுவினரின் துணிச்சல் தெரிகிறது. சினிமாவிற்கு வந்ததில் இருந்து இரண்டுமுறை நான் கோமாளியாக மற்றவர்கள் கண்ணுக்கு தெரிஞ்சிருக்கிறேன்.. இப்போ கூட அப்படித்தான் தெரிஞ்சுக்கிட்டிருக்கேன். முதல் தடவையா என்னோட படத்தை டைரக்ட் பண்ண தயாரிப்பாளர் தேடி அலைஞ்சபோது.
இரண்டாவது துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியபோது.. அப்போ தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை. அதனால் படம் எடுக்க பணம் கொடுத்த பைனான்சியர், 'அப்பனும் மகனும் கேமராவ வச்சு விளையாடிட்டு இருக்காங்க'ன்னு விமர்சனம் பண்ணார். அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்துதான் இங்கே வந்திருக்கிறேன். எனக்கு ராஜ்கிரண்னு ஒரு கடவுள் கிடைச்சார். அதனால் இந்த உயரத்துக்கு வர முடிஞ்சது.
இன்னைக்கு கொஞ்சம் சினிமா ஆரோக்கியமா இருக்கு. ஒரு ஆடியோ ரிலீஸுக்கு டிஸ்ட்ரிபியூட்டர் வர்றதே ஆரோக்கியமான விஷயம் தான். சின்னப்படம் வந்தாலும் மூணு நாள் தான். சூப்பர்ஸ்டார் படமும் மூணு நாள். இன்னைக்கு உலகம் பூரா பேசப்படுற பாகுபலி கூட பத்து நாட்கள் தான்.. அதனால இனி நிறைய படங்கள் வெளிவர வாய்ப்பு இருக்கு, என்றார் கஸ்தூரி ராஜா.