ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை அடுத்து திரி படத்திலும் சுப்ரமணியபுரம் சுவாதியுடன் இணைந்து நடித்துள்ளார் அஸ்வின். சுவாதியுடன் நடித்த அனுபவம் குறித்து அஸ்வின் கூறுகையில்,
திரி படத்தில் கல்லூரி முடித்து விட்டு என்ன பண்ணலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞனை, அந்த கல்லூரில் நடந்த ஒரு விசயம் எந்தமாதிரி பிரச்சினையை சந்திக்க வைக்கிறது என்கிற மாதிரி ரோலில் நடித்துள்ளேன். நான் இந்த படத்திற்குள் வருவதற்கு முன்பே சுவாதி கமிட்டாகியிருந்தார்.
சுவாதி எப்போதுமே ஸ்பாட்டில் துறுதுறு என்றிருப்பார். அவர்கூட நடிக்கும் போது கொஞ்சம் உசாராக இருக்க வேண்டும். நல்லா டாமினேட் பண்ணுவார். சின்ன சின்ன விசயங்களை அழகாக வெளிப்படுத்துவார். அதனால் அவருடன் நடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் மொத்த ஸ்கோரையும் அவரே தட்டிச்சென்று விடுவார். மேலும், இந்த படம் அப்பா மகன் சம்பந்தப்பட்ட கதையில்தான் உருவாகியிருக்கிறது. எனது அப்பாவாக ஜெயபிரகாஷ் நடித்துள்ளார்.
இதுதவிர, இது வேதாளம் சொல்லும் கதை படத்திலும் நடித்து வருகிறேன். அது முடியுற நிலையில் உள்ளது. வீடியோ கேம் டிசைனராக நடிக்கிறேன். விக்ரமாதித்தன் கேம் ஒன்று டிசைன் பண்ணும்போது ஏற்படும் நிகழ்வுதான் அந்த படம். அது ஒரு திரில்லர் படம். சென்னையில் ஆரம்பித்து மத்தியபிரதேஷ், ராஜஸ்தான் எல்லாம் போகும். இதுவரைக்கும் எந்த சினிமாவிலும் பார்க்காத கதையாக இருக்கும். வித்தியாசமான சரித்திர படம். அந்த படத்திற்காக நானும் குருசோமசுந்தரமும் நிறைய ஹோம்ஒர்க் செய்தோம். அது வேற மாதிரி ஸ்கிரிப்ட். இன்டர்நேசனல் பீலில் இருக்கும் ஒரு தமிழ் படம் என்றார்.