ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் படம் '2.0'. ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் 'சிவாஜி, எந்திரன்' ஆகிய படங்களை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படம் இருக்கப் போகிறது என்பது படத்திற்கான செலவுத் தொகையைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
'பாகுபலி' படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான செலவு 400 கோடி ரூபாய் இல்லை என்பதே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இரண்டு பாகங்களுக்கும் சேர்ந்து சுமார் 300 கோடி வரைதான் செலவு செய்திருக்கிறார்கள் என்பது டோலிவுட் வட்டாரத் தகவல். 'பாகுபலி' படம் வெளிவந்த போதே 'ஷங்கருக்கு சவால்' என சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வந்தார்கள். ஆனால், ஒரு பேட்டியில் 'பாகுபலி' இயக்குனர் ராஜமௌலி, இயக்குனர் ஷங்கருடன் என்னை தயவு செய்து ஒப்பிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இன்று 'பாகுபலி 2' படத்தைப் பார்த்தவர்கள் மீண்டும் ராஜமௌலி - ஷங்கர் ஒப்பீட்டை ஆரம்பித்துவிட்டார்கள். விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் ஷங்கர் முன்னோடி என்பது இந்தியத் திரையுலகினருக்கே தெரிந்த ஒன்றுதான். 'பாகுபலி 2' படத்தின் கதைக்களம் அதற்கு சரியான அடித்தளமாக அமைந்தது. இருந்தாலும் மீண்டும் ஷங்கர் எப்படி 'பாகுபலி 2' படத்தின் விஎப்எக்ஸை மிஞ்சும் அளவிற்கு செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'பாகுபலி 2' படம் பற்றிய விஎப்எக்ஸ் விவரங்களை முன்கூட்டியே தெரிந்துதானோ என்னமோ, '2.0' படத்தை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.