ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
பிரபல இசை அமைப்பாளர் பரணி இப்போது இயக்குனாகியிருக்கிறார். 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் படத்திற்கு ஒண்டிக்கட்ட என்று தலைப்பு வைத்திருக்கிறார். இதில் தெனாவட்டு, குரங்கு கைல பூ மாலே, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் குணசித்ர கேரக்டர்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். இவர்களுடன் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ட்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.
பரணியே இசை அமைக்கிறார் ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் பாபநாசம் பகுதியில் நடந்து வருகிறது. துண்டு பீடி இல்லேன்னா தூக்கம் வராது, சரக்கு அடிக்கலேனனா சத்தம் வராது என்ற பாடலை பாபநாசம் குப்பை மேட்டில் படமாக்கினார்கள். கிராமிய பின்னணியில் குடும்ப செண்டிமென்டுடன் படம் உருவாகி வருகிறது.