ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடவுள் அருளால், பத்ம விபூஷண் விருது கிடைத்துள்ளது, என, பிரபல பாடகர் ஜேசு தாஸ் கூறினார். கோவையில், தனவர்ஷா அறக்கட்டளை சார்பில், அபூர்வ ராகத்துக்கு குரு வணக்கம் எனும் தலைப்பிலான, இசை நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், பிரபல பாடகரும், சமீபத்தில், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான, ஜேசுதாஸ் பங்கேற்றார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், கடவுள் அருளால், பத்ம விபூஷண் விருது கிடைத்துள்ளது. கடவுள் தரும் சந்தோஷம், துக்கம் இரண்டையும், சமமாகத்தான் பார்க்கிறேன்; கடவுளின் அம்சங்கள் தான் நாம், என்றார். இசையமைப்பாளர், இளையராஜா, பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வக்கீல் நோட் டீஸ் அனுப்பிய விவகாரம் குறித்து, நிருபர்கள், ஜேசுதாசிடம் கேள்வி எழுப்பியதற்கு, நான் யாருக்கும் நோட்டீஸ் அனுப்ப மாட்டேன், என்றார்.