ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'ப. பாண்டி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். அவருடை இயக்கத்தை விமர்சகர்களும், திரையுலகத்தினரும் பாராட்டி வருகிறார்கள். 'ப. பாண்டி' படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு, மீண்டும் 'வட சென்னை' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடங்களுக்கு நடைபெறும் எனத் தெரிகிறது. அடுத்த கோடை விடுமுறையில்தான் மூன்று பாகங்களாக உருவாக இருக்கும் 'வட சென்னை' படத்தின் முதல் பாகத்தைத் திரையில் பார்க்கலாம்.
தனுஷ் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' படம் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகலாம். அதன் பின் 'வட சென்னை' படம் வெளிவரும் வரை வேறு படங்கள் எதுவும் வராத காரணத்தால் தனுஷ் உடனடியாக 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்கிறார்கள்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டில் வெளிவந்த 'மாரி' திரைப்படம் சுமாரான வசூலைத்தான் பெற்றது. இருந்தாலும் படத்திற்கும் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. அதை வைத்தே இப்போது இரண்டாம் பாகத்தை எடுக்க தனுஷ் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். படத்திற்கான கதையை இயக்குனர் பாலாஜிமோகன் சில மாதங்களுக்கு முன்பே எழுதி முடித்துவிட்டார். விரைவில் 'மாரி 2' படத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம்.