ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எந்திரன் இரண்டாம் பாகமான 2.O-வில் ரஜினியை விட அக்ஷ்ய் குமாருக்கு தான் அதிக சம்பளம் என்று கூறப்படுகிறது. இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்க்கும் இரண்டு படங்களில் ஒரு படமான பாகுபலி-2 இம்மாதம் வெளியாக இருக்கிறது. மற்றொரு படமான 2.O தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷ்ன்ஸ் பிரமாண்டமாய் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட் முடியும் தருவாயில் உள்ளது. ரஜினி தன் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறார்.
இதனிடையே 2.O படம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு வில்லனாக தான் அக்ஷ்ய் குமார் நடிக்கிறார். ஆனாலும் இப்படத்தில் ரஜினியை விட அக்ஷ்ய் குமாருக்கு தான் சம்பளம் அதிகமாம். நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.2 கோடி அவருக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய சினிமாவிலே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.350 முதல் 400 கோடி செலவில் 2.O படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் உடன் விஎப்க்ஸ் உள்ளிட்ட போஸ்ட் பணிகளும் மும்முரமாய் நடந்து வருகிறது. வருகிற தீபாவளி தினத்தில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிரமாண்டமாய் ரிலீஸாக இருக்கிறது.