ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'கத்தி' படத்திற்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கி வருகிறார். கடந்த வருடம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. வெளிநாடுகளில் பாடல் காட்சிகள் படமாக்கம் உட்பட ஏறக்குறைய அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்துவிட்டன. சில விடுபட்ட காட்சிகளை மட்டும் தற்போது படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படத்தின் தலைப்பு இன்னமும் அறிவிக்கப்படாமலே இருந்தது மகேஷ் பாபுவின் ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இயக்குனர் முருகதாஸ் மீது காட்டமாக இருந்தனர். விரைவில் படத்தின் முதல் பார்வையையும், படத்தின் தலைப்பையும் அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இனிமேலும், தாமதித்தால் நன்றாக இருக்காது என்று நினைத்த முருகதாஸ், நாளை படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பை வெளியிட உள்ளார்.
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து ஒரே தலைப்புதான் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ளது. நாளைய தலைப்பு பற்றிய எதிர்பார்ப்பு மகேஷ்பாபு ரசிகர்களிடம் இப்போதே அதிகமாகியுள்ளது. அவர்கள் விரும்பும் தலைப்பாக அது அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.