ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை, நடிகர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் அவ்வப்போது திடீர் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவே, தமிழகத்தை உற்று நோக்கி கவனிக்க தொடங்கியுள்ளது. அரசியல் மாற்றம் மட்டுமின்றி ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகள் போராட்டம் என தமிழகம் போராட்ட களமாகவும் மாறி வருகின்றன.
தமிழக அரசியல் பற்றியும், தமிழகத்தில் நடக்கும் செயல்கள் பற்றியும் அவ்வப்போது தனது கருத்தை தைரியமாக பதிவிட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன். டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், நடிகர் கமல், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை டில்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது கமலுக்கு, பொன் ராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்தார்.
டில்லியில் கமல் என்னை சந்தித்தார், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பொன் ராதாகிருஷ்ணன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.