ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இயக்குநர் அகத்தியனிடம் உதவியாளராக இருந்தபோது, அவருடைய மகளையே காதலித்து அகத்தியனுக்கு மாப்பிள்ளையாக மாறியவர் திரு. விஷால் உடன் நட்பு ஏற்பட்டு, அதன் மூலம் அவரிடம் கதை சொல்லி தீராத விளையாட்டு பிள்ளை படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். தீராத விளையாட்டு பிள்ளை படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. ஆனாலும் நட்புக்காக, திருவுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளித்தார் விஷால். ஆனால் அவருக்கு இயக்கிய படங்கள் அனைத்துமே தோல்வியை தழுவின. அதன்பிறகு விஷால்-திரு கூட்டணி இணையவே இல்லை.
இதையடுத்து ஜெய், டாப்ஸி நடிக்க புதிய படமொன்றை தொடங்கினார் திரு. ஆனால், தொடங்கிய சில வாரங்களிலேயே அந்தப்படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திரு இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் கருடா தொடங்கப்பட்டது. பேச்சுவார்த்தை நிலையிலே இந்தப்படமும் கைவிடப்பட்டது.
இந்நிலையில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்றை இயக்க இருக்கிறார் திரு. லோ பட்ஜெட்டில் தயாராக உள்ள இந்தப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவுள்ளது. ஆமாம்... யார் இந்த சந்தீப் கிஷன்? தெலுங்கு நடிகரான இவர் சமீபத்தில் வெளியான மாநகரம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.