ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமுத்திரகனி இயக்கி தயாரித்து கதையின் நாயகனாக நடித்த 'அப்பா' கடந்த ஆண்டு வெளியான மிகச்சிறந்த படம். தமிழில் வர்த்தக வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்த படத்தை மலையாளத்திலும் ரீ-மேக் செய்து வருகிறார். 'ஆகாசமிட்டாய்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் ஜெயராம் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.
இப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பும் சமீபத்தில் கொச்சியில் துவங்கியது. படப்பிடிப்பு துவங்கிய ஒரு சில நாட்களிலேயே வரலட்சுமி சரத்குமார் ஆகாசமிட்டாய் படத்திலிருந்து விலகிவிட்டார். இது சம்பந்தமாக வரலட்சுமி சரத்குமார் சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் ''ஆணாதிக்க பிரச்சனைகளால் 'ஆகாசமிட்டாய்' படத்திலிருந்து விலகுகிறேன்'' என்று ட்வீட் செய்திருந்தார்.
உண்மையில் சொகுசு ஹோட்டலில் தங்க வைக்க மறுத்து சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் தங்க சொன்னதால் தான் வரலட்சுமி விலகினார். வரலட்சுமி விலகியதை தொடர்ந்து இப்போது அந்த கேரக்டரில் இனியா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது.