ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
1939ம் ஆண்டு வெளியான படம் தியாகபூமி, சினிமாவுக்கென்றே கல்கி எழுதிய கதையை கே.சுப்பிரமணியம் இயக்கினார். இதில் கே.ஜே.மகாதேவன், பாபநாசம் சிவன், எஸ்.டி.சுப்புலட்சுமி உள்பட பலர் நடித்தார்கள்.
வெளிநாட்டில் படித்து அங்கேயே வேலை பார்க்கும் ஹீரோ தன் தாயின் வற்புறுத்தலால் ஒரு கிராமத்து பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கு வெளிநாட்டு காதலி ஒருத்தியும் இருக்கிறார். அதன் பிறகு கிராமத்து பெண் என்ன நிலைமைக்கு ஆளாகிறார் என்கிற கதை.
இந்தப் படம் வெளிவந்த சில நாட்களிலேயே படத்துக்கு ஆங்கில அரசு தடைவிதித்தது. காரணம் அப்போது சுந்திர போரட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்து. படத்தில் சுதந்திர வேட்கையை தூண்டும் பாடல்கள் இடம்பெற்றிருந்தது.
படத்துக்கு ஆங்கில அரசு தடைவிதிக்கிறது என்பதை அறிந்த தயாரிப்பாளரான எஸ்.எஸ்.வாசன் படத்தை மக்களுக்கு இலவசமாக திரையிட்டார். இடைவெளியில்லாமல் படம் ஓடிக் கொண்டே இருந்தது. மக்கள் கூட்டம் கூட்டாக சென்று இலவசமாக பார்த்தனர். ஆங்கில அரசு படத்தை தடை செய்தது. அதன்பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்ததும் மீண்டும் படம் திரையிடப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.