ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமார் நாயகனாக நடித்த படம் சிவலிங்கா. அதேபடத்தை தற்போது லாரன்சை நாயகனாக வைத்து தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் பி.வாசு. மேலும், தனது மகன் ஷக்திக்கும் இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கொடுத்திருக்கிறார் அவர்.
இதுபற்றி ஷக்தி கூறுகையில், கன்னட சிவலிங்கா படத்தில் நான் நடிக்க சிவராஜ்குமார்தான் காரணம். அவர்தான் அப்பாவிடம் எனக்காக சிபாரிசு செய்தார். அதனால் கன்னடத்தில் ஸ்கிரிப்ட் பண்ணும்போதே அப்பாக்கிட்ட சண்டை போட்டு இந்த வேடத்தை வாங்கினேன். அதேபோல், தமிழில் சிவலிங்கா படத்தில் நான் நடித்ததற்கு லாரன்ஸ் மாஸ்டருக்கு நன்றி சொல்லனும். ஏனென்றால் கன்னட சிவலிங்காவுக்காக சிவராஜ்குமார் செய்ததை விடவும் லாரன்சின் சப்போட் எனக்கு இன்னும் அதிகமாக இருந்தது. கன்னடத்தை விட இந்த படத்தில் எனது கேரக்டரை மாற்றினார்கள். அப்படி மாற்ற சொன்னதும் லாரன்சுதான். ஆப்தமித்ராவில் இருந்து எப்படி சந்திரமுகிக்கு நிறைய விசயங்கள் மாற்றினார்களோ, அந்த மாதிரி கன்னட சிவலிங்கா தமிழ் ஆடியன்சுக்காக நிறைய மாற்றப்பட்டுள்ளது. நான் பண்ணிய படங்களில் இந்த படத்தில் பெஸ்ட் பர்பாமென்ஸ் கொடுத்திருப்பதாக நினைக்கிறேன் என்கிறார் ஷக்தி.