ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சென்னை ஈசிஆர்., ரோட்டில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில், நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்த கமல், புகைமூட்டத்திற்கு நடுவே படி வழியாக இறங்கி வெளியேறினார். இவ்விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், பாதுகாப்பாக இருக்கிறேன். உறங்க செல்கிறேன். உதவிய பணியாளர்களுக்கும், அக்கறையுடன் விசாரித்தவர்களுக்கும் நன்றி. இவ்வாறு தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமலின் மேலாளர் மூர்த்தி கூறியதாவது... ஈசிஆர்., ரோட்டில் உள்ள கமல் வீட்டில் நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. மூன்றாவது மாடியிலிருந்த பிரீட்ஜ்ஜில் ஏற்பட்ட தீ, அப்படி பக்கத்து அறையில் இருந்த ஏசி ரூமிற்கும் பரவிவிட்டது. யாரும் எந்த பாதிப்பும் இல்லை, கமல் உட்பட அனைவரும் நலமாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.