ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சினிமா துறையில் நடிகர், நடிகை, இயக்குநர், படம், இசை, ஒளிப்பதிவு... என பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் சண்டை கலைஞர்களுக்கு என்று இதுவரை எந்த விருதும் வழங்கப்படவில்லை. ஆக்ஷ்ன் காட்சிகளை மட்டுமே வைத்து வெற்றி பெற்ற படங்களும் இருக்கின்றன. அந்த வகையில் சண்டை கலைஞர்களுக்கும் விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் கூட ஐஸ்வர்யா தனுஷ், சண்டை கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதுமட்டுமல்ல அவர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் எடுத்தார். இந்நிலையில், 63 ஆண்டுகால தேசிய விருது வரலாற்றில் முதன்முறையாக இந்தாண்டு சண்டை கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் சிறந்த சண்டை கலைஞருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சண்டைகாட்சிக்கான முதல் தேசிய விருதை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பெறுகிறார். மலையாளத்தில் வெளியான புலி முருகன் படத்தில் சிறப்பாக சண்டைகாட்சி அமைத்ததற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆண்டுதோறும் சண்டை கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கப்படும்.