14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன். சமீபத்தில் லண்டனில் தனது மகள் அனுஹாசன் வீட்டில் இருந்தபோது காலமானார். சந்திரஹாசனுக்கு சென்னை காமராஜர் அரங்கத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், கமலை பற்றி மிகவும் கவலைப்பட்டார்.
ரஜினி பேசுகையில், கமலுக்கு மூன்று தந்தைகள். ஒருவர் அவரை பெற்ற சீனிவாசன், வளர்த்த சாருஹாசன், ஆளாக்கிய சந்திரஹாசன். இரண்டு முறை தான் சந்திரஹாசனை சந்தித்துள்ளேன். அவரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். பொருளாதார வளர்ச்சி கமல் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. அப்படியும் அவர் சேர்த்து வைத்திருந்தார் என்றால் அது சந்திரஹாசனால் தான். சந்திரஹாசன் இல்லாமல், கமல் இனி எப்படி சம்பாதிக்க போகிறார் என்று தெரியவில்லை, அதைப்பற்றி தான் நான் அதிகம் கவலைப்படுகிறேன். கமல் கடும் கோபக்காரர், அதனால் அவரிடம் ஜாக்கிரதையாக இருப்பேன் என்றார்.