ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் ரசிகர்களை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் கார்த்தி மீது சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் நான் அப்படி பேசவில்லை என்றும், தமிழ் ரசிகர்கள் என் பெற்றோர் போன்றவர்கள் என்றும் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார் கார்த்தி. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கார்த்தியிடம், உங்களுக்கு தமிழ் ரசிகர்கள் பிடிக்குமா? தெலுங்கு ரசிகர்கள் பிடிக்குமா என்று விழாவிற்கு வந்தவர்கள் கேட்க, அதற்கு கார்த்தி, நிச்சயமாக தெலுங்கு ரசிகர்கள் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். தெலுங்கு ரசிகர்கள் ஒவ்வொரு சீனுக்கும், ஒவ்வொரு பிரேமுக்கும் கைதட்டி விசிலடிப்பார்கள். ஆனால் தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லை, ரொம்ப உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் என்று பதில் சொல்வது போல் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. கார்த்தியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனிடையே தமிழ் ரசிகர்களை இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தி, கார்த்தி வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ஒரு கட்சி அறிவித்துள்ளது. ஆனால் தான் அப்படி பேசவில்லை என்று கார்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழ் ரசிகர்கள் என்னை வளர்த்து ஆளாக்கியவர்கள். அவர்களை நான் இழிவாக ஒருபோதும் பேசமாட்டேன். தமிழ்நாடும், தமிழ் ரசிகர்களும் எனது பெற்றோர் போன்றவர்கள். பெற்றோரை பற்றி யாராவது தவறாக பேசுவார்களா? கனவில் கூட யாரையும் நான் தவறாக நினைத்தது கிடையாது. தமிழக மக்களுக்கு என்னை பற்றி தெரியும். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. ஹைதராபாத்தில் நடந்த விழாவில், ஆந்திராவில் எனது படங்களை பார்த்து வரவேற்பு கொடுப்பதற்காக தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்னேன். தெலுங்கில் பேசியதால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.