ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கோலிவுட்டில் நேற்று ஒரே நாளில் 9 திரைப்படங்கள் வௌியாகின. இது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானதா, இல்லையா என்று ஒரு பக்கம் விவாதம் நடந்து கொண்டிருந்தாலும் நேற்று வௌியான படங்களில் கடுகு, எங்கிட்ட மோதாதே படங்கள் தான் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளன. அதிலும் விஜய் மில்டன் இயக்கத்தில், ராஜகுமாரன், பரத், சுபிக்ஷா, ராதிகா பிரசித்தா உள்ளிட்ட பலரது நடிப்பில் வௌியான இப்படத்திற்கு விமர்சகர்களால் பாராட்டு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, படத்தில் ஒரு நல்ல மெசேஜ்ஜூம் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் பாராட்டு பெற்றுள்ளது. கடுகு படத்தை இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட பல திரையுலகினரும் பாராட்டியுள்ளனர். இந்தாண்டின் கனமான பதிவாக கடுகு படம் இருக்கும் என்றும், ராஜகுமாரனின் யதார்த்த நடிப்பு சிறப்பாக இருப்பதாக திரையுலகினர் பாராட்டி வருகின்றனர். கூடவே இப்படியொரு படத்தை கொடுத்த விஜய் மில்டனையும் பாராட்டியுள்ளனர்.