ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒரு இளம் பெண்ணை ஒரு குடும்பம் வயதான ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறது. பணமும், செல்வாக்கும் இருந்தாலும் அந்த முதியவரால் ஒரு பெண்ணுக்கு முழுமையான கணவனராக இருக்க முடியவில்லை. மனதில் நிறைய கனவுகளுடன் புகுந்து வீட்டுக்கு வந்திருக்கும் மணமகள் தன் தந்தை வயதை தாண்டிய ஒருவருடன் எப்படி குடும்பம் நடத்த முடியும். அவளது மனம் உளவியல் ரீதியாக என்ன பாடுபட்டிருக்கும். இப்படி ஒரு கதை இப்போது சினிமாவில் வந்தாலும் சிலாகித்து பாராட்டுவார்கள். ஆனால் இப்படி ஒரு கதையுன் சேவாதனம் வந்தது 1938ம் ஆண்டில்.
அந்த இளம் பெண்ணாக நடித்தது இசை குயில் பாரதரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி, வயதான முதியவராக நடித்தது எம்.ஜி.நடேச அய்யர், இவர்களுடன், எஸ்.வரலட்சுமி, குமாரி கமலா, பாபநாசம் சிவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். புராண படங்களும், சரித்திர படங்களும் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் சமூக புரட்சிப் படத்தை இயக்கி சாதனை படைத்தார் இயக்குனர் கே.சுப்பிரமணியம்.
முன்சி பிரேம் சந்த் என்ற வங்க எழுத்தாளர் எழுதிய நாவலை தழுவி இந்தப் படத்தை கே.சுப்பிரமணியம் இயக்கினார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக் பூனூலை அறுத்து எரிவது பரபரப்பாக பேசப்பட்டது. இந்தப் படத்தில் நடேச அய்யர் பூனூலை அறுத்து எரிவார். இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டது. இருந்தாலும் படம் மகத்தான வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவின் முதல் சமூக புரட்சி படமாக இது அமைந்தது.