ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், மைம்கோபி நடித்துள்ள படம் கட்டப்பாவ காணோம். ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். மணி சேயோன் இயக்கி உள்ளார். "கட்டப்பா படத்தால் தான் எனக்கு இந்தி பட வாய்ப்பு கிடைத்தது" என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் மேலும் கூறியதாவது:
சிலர் தாங்கள் வளர்க்கும் நாய் அல்லது பூனையை அதிர்ஷ்டமாக கருதலாம், இன்னும் சிலர் தாங்கள் உடுத்தும் குறிப்பிட்ட நிற ஆடையை அதிர்ஷ்டமாக கருதலாம். அந்த வகையில், எனக்கு இந்த கட்டப்பாவ காணோம் திரைப்படம் என் வாழ்க்கையில் அமைந்த மிகவும் அதிர்ஷ்டமான ஒரு திரைப்படம். ஏனென்றால், இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது தான் எனக்கு இந்தி திரையுலகில் கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தி வாய்ப்பு வந்தபோது இயக்குனரிடம் சொன்னேன். நல்ல வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி இந்தப் படத்தின் படப்பிடிப்புகளை தள்ளி வைத்து என்னை இந்தி படத்தில் நடிக்க அனுப்பி வைத்தார். அப்படிச் செய்யாமல் எங்கள் படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தால். எனது இந்தி வாய்ப்பு பறிபோயிருக்கும்.
2017 ஆம் ஆண்டில் நான் நடித்து வெளியாகும் முதல் திரைப்படம் கட்டப்பாவ காணோம். நிச்சயமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும், குறிப்பாக குழந்தைகளை அதிகளவில் கவரக்கூடிய ஒரு திரைப்படமாக இருக்கும் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.