ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சாட்டை படத்தில் யுவனுக்கு ஜோடியாக நடித்தவர் மகிமா நம்பியார். கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்துள்ள குற்றம் 23 படத்தில் நடித்திருப்பவர், அடுத்து ஈட்டி பட டைரக்டர் ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வரும் ஐங்கரன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த ஐங்கரன் படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். நான்கு நாட்கள் ஜி.வி.பிரகாசுடன் இணைந்து நடித்தேன். மற்றபடி என் கேரக்டர் கதைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது பற்றி என்னிடம் இன்னும் டைரக்டர் சொல்லவில்லை. இதையடுத்து இன்னும் சில படங்களில் நடிப்பதற்கு கதை கேட்டிருக்கிறேன். இப்படி எனக்கு பல படங்கள் கிடைப்பதற்கு முக்கிய காரணம், குற்றம் 23 படமும், அந்த படத்தின் கேமராமேன் கே.ஸ்.பாஸ்கரனும்தான் என்கிறார் மகிமா நம்பியார்.
காரணம், குற்றம் 23 படத்தில் நடிக்க சென்றபோது என் முகத்தில் மேக்கப்பை போடவே அவர் அனுமதிக்கவில்லை. இதனால் நான் பயந்து விட்டேன். மேக்கப்பே போடாமல் எப்படி நம்மை அழகாக காட்ட முடியும் என்று பயந்தபடியே நடித்தேன். ஆனால், மானிட்டரில் பார்த்தபோது நான் ரொம்ப அழகாக இருந்தேன். அது எனக்கு பெரிய ஆச்சர்யத்தைக்கொடுத்தது. பின்னர் படத்தின் ஆடியோ வெளியானபோது, நான் ரொம்ப அழகாக இருப்பதாக பலரும் சொன்னார்கள். இப்போது வரை படம் பார்த்து விட்டு என்னை தொடர்பு கொள்ளும் நண்பர்கள் எனது அழகைப்பற்றிதான் பெருமையாக பேசுகிறார்கள்.
அதனால் என்னை மிகவும் அழகாக காண்பித்த கேமராமேன் கே.எம்.பாஸ்கரன் எனது சினிமா கேரியரில் மறக்க முடியாதவராகி விட்டார். அதனால் என்னால் ஒருநாள்கூட அவரிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. தினமும் போன் செய்து அவரிடம் பேசி வருகிறேன் என்கிறார் மகிமா நம்பியார்.