ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபமெடுத்தபோது, மாநில ஆளுங்கட்சிக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அதையடுத்து மத்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டு தமிழக சட்டசபையில் புதிய அவசர சட்டம் பிறப் பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டது. அப்போது தமிழ் திரையுலகில் இருந்து அந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஜி.வி.பிரகாசும் ஒருவர். முன்னதாக, தனது டுவிட்டரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த அவர், கொம்பு வச்ச சிங்கமடா -என்ற பெயரில் ஒரு ஜல்லிக்கட்டு ஆல்பமும் வெளியிட்டார்.
இந்நிலையில், தற்போது நெடுவாசலில் நடைபெற்று வரும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளார் அவர். கடந்த ஞாயிறன்று நெடுவாசல் போராட்டக்களத்துக்கு சென்றிருந்த ஜி.வி.பிரகாஷ், ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று, தமிழக அரசு இந்த ஹைட்ரோ கார் பன் திட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றும் வரை போராட்டத்தை நிறுத் தக்கூடாது என்று பேசியுள்ளார். அதோடு, அன்றைய தினத்தில் விவசாயிகள் சம்பந்தப்பட்ட ஒரு ஆல்பத்தை வெளியிட திட்டமிட்டிருந்த அவர், அதற்கான இசைப் பணிகள் முழுமை அடையாததால் அடுத்த முறை அங்கு செல்லும்போது அந்த ஆல்பத்தை வெளியிடுகிறாராம்.