ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எப்போதுமே தனது படங்களில் ஒரு தயாரிப்பாளரை நடிகர் ஆக்குவது பாலாவின் வழக்கம். நான் கடவுள் படத்தில் அழகன் தமிழ் மணியை நடிகர் ஆக்கினார். பரதேசி படத்தில் ஜேடி-ஜெர்ரியை நடிகர் ஆக்கினார். தாரை தப்பட்டை படத்தில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷை வில்லன் ஆக்கினார். தற்போது அவர் இயக்கி வரும் நாச்சியார் படத்தில் பிரபல தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசை நடிகராக்கி உள்ளார். படத்தில் அவர் டெரர் வில்லனாம்.
ராக்லைன் வெங்கடேஷ் கன்னட சினிமாவின் பிரபலமான தயாரிப்பாளர் தெலுங்கு, தமிழ், கன்னடத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். அதில் லிங்கா உள்ளிட்ட பிரமாண்ட படங்களும் அடங்கும். பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேஷ் முதலில் சினிமாவுக்கு வந்ததே நடிகத்தான். ஆரம்பத்தில் நான்கைந்து படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் அதன் பிறகு நடிப்பை விட்டுவிட்டு முழுநேர தயாரிப்பாளராகி விட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் ரஜினியின் கர்நாடக பிரதிநிதியாகவே செயல்பட்டார். ரஜினி பெங்களூர் சென்றால் இவர்தான் அருகில் இருந்து கவனித்துக் கொள்வார். அந்த அன்புக்கு பரிசாகத்தான் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ஆக்கினார் ரஜினி.
லிங்கா பட விவகாரத்தில் உரிய நஷ்டஈடு வழங்கவில்லை என்று தமிழ்நாட்டில் உள்ள சில விநியோகஸ்தர்கள் ராக்லைன் வெங்கடேஷ் மீது கோபமாக உள்ள நிலையில் துணிச்சலுடன் அவரை நடிக்க வைக்கிறார் பாலா. ராக்லைன் வெங்கடேஷ் சமீபத்தில் வெளிவந்த ராம்கோபால் வர்மாவின் கில்லிங் வீரப்பன் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.