ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் மற்றும் ஸ்பைசி கூல் இம்பரெஷன்ஸ் சார்பில் திலீபன், எம்.செங்கோட்டையன் இணைந்து தயாரித்துள்ள படம் களவு. கலையரசன், கருணாகரன், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளார்கள். அபிராமி ஐயர் என்ற புதுமுகம் ஹீரோயின். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் முரளி கார்த்திக் கூறியதாவது:
கிரைம் - திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் படம். எதிர்பாராத சம்பவங்களால் மூன்று இளைஞர்கள் மற்றும் ஒரு தம்பதிகளின் வாழ்க்கை மாறுகின்றது. இது தான் படத்தின் ஒரு வரி கதை. நம் சமுதாயத்தில் நடைபெறும் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் படம், முழு படமும் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
தன்னுடைய நண்பர்களோடு இருக்கும் போது குதூகலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஐடி ஊழியர் கலையரசன், தன்னுடைய வீட்டிற்கு சென்றவுடன் முழுவதுமாக மாறி விடுகிறார். இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு தான் படத்தின் கதை நகருகின்றது. இரவு பணிகளில் வேலை பார்க்கும் ஒரு பிபிஓ நிறுவன ஊழியராக கருணாகரன் நடித்துள்ளார். அவருடைய நடவடிக்கைகள் வித்தியாசமாக காணப்பட்டாலும், அதற்கு ஆழமான அர்த்தங்கள் இருக்கும். 22 நாட்களில் படத்தை முடித்து விட்டோம். மே மாதம் வெளிவருகிறது. என்றார் முரளி கார்த்திக்.