ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சசிகுமார், லட்சுமி மேனன் நடித்து 2013ம் ஆண்டு வெளிவந்த 'குட்டிப் புலி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அறிமுகப் படத்திலேயே வெற்றி பெற்ற இயக்குனர்களின் பட்டியலில் இணைந்த முத்தையா, அடுத்து கார்த்தி நடித்த 'கொம்பன்' படத்தை இயக்கினார். அந்தப் படமும் வெற்றி பெற்றது.
அடுத்து விஷால் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'மருது' படத்தை இயக்கினார். ஆனால், அந்தப் படம் தோல்வியடைந்தது.அந்தப் படத்தையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை முத்தையா இயக்குவார் என்று சொல்லப்பட்டது. 'கொம்பன்' படம் வெற்றி பெற்ற சமயத்திலேயே சூர்யா படத்திற்காகவும் முத்தையா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
சூர்யா படத்தை இயக்குவதற்காக காத்திருந்தார் முத்தையா. ஆனால், 'மருது' படம் தோல்வியடைந்ததால் முத்தையாவிற்கு வாய்ப்பு கொடுக்கம் எண்ணத்தை சூர்யா தரப்பு கைவிட்டதாகத் தெரிகிறது. அதனால்தான், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஆரம்பித்துவிட்டார்கள் என்கிறார்கள்.இதற்கு மேலும் காத்திருக்க விரும்பாத முத்தையா, தன்னை அறிமுகப்படுத்திய சசிகுமாரிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டாராம்.
'பலே வெள்ளையத் தேவா' படத்தின் தோல்வியால் தடுமாறிக் கொண்டிருக்கும் சசிகுமாரும் முத்தையா இயக்கத்தில் நடிக்க தயாராகிவிட்டார். விரைவில் அறிவிப்பு வரலாம்.