ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வானவராயன் வல்லவராயன், நவரச திலகம், கடலை படங்களைத் தொடர்ந்து மா.கா.பா.ஆனந்த் நடித்துள்ள படம் பஞ்சுமிட்டாய். நிகிலா விமல் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, மா.கா.பா.ஆனந்தின் மனைவி, நடிகை நிகிலாவுக்கு அவ்வப்போது தனது வீட்டில் இருந்து சாப்பாடு கொடுத்து அனுப்பினாராம்.
அதுபற்றி மா.கா.பா.ஆனந்த் கூறுகையில், இந்த படத்தில் நடிப்பதற்காக கேரளாவில் இருந்து நிகிலா சென்னை வந்திருந்தார். அப்போது அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தபோது ரொம்ப அமைதியாக இருந்தார். இவர்தான் படத்தில் உங்களுக்கு மனைவியாக நடிக்கப்போகிறார் என்றனர். அதையடுத்து நிகிலாவிடம் சில வார்த்தைகள் பேசி விட்டு நான் விடை பெற்றபோது, சரி அண்ணா என்றார். அப்போது அவரிடம், அண்ணா என்று கூப்பிடாதே. மாகாபா என்று கூப்பிடு. இல்லையேல் ஆனந்த் என்றாவது கூப்பிடு என்றேன்.
ஆனால் அவர், அதற்கும் சரி அண்ணா என்றார். நமக்கு மனைவியாக நடிக்கப் போகிற நடிகை அண்ணா என்று அழைக்கிறாரே என்று அதிர்ச்சியுடன் பார்த் தேன். இந்த விசயத்தை வீட்டிற்கு சென்றதும் எனது மனைவியிடம் சொன் னேன். அவருக்கு சந்தோசம் தாங்கவில்லை. அடுத்து நான் படப்பிடிப்புக்கு கிளம்பும்போது, நிகிலாவுக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பினார் என் மனைவி. அப்போதுதான் அண்ணா என்று சொன்னது இப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொண்டேன் என்கிறார் மா.கா.பா.ஆனந்த்