ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை, திருத்தணி என ஊர்களின் பெயர்களில் பல ஹிட் படங்களை இயக்கியவர் பேரரசு. அப்படி தான் இயக்கிய எல்லா படங்களிலுமே ஏதாவது ஒரு கேரக்டரில் நடித்தும் வந்தார். பரத் நடித்த திருத்தணி படத்திற்கு பிறகு திகார் படத்தை இயக்கியவர், தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டிருப்பதோடு படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
அந்தவகையில், தனது இணை இயக்குனர் ஜெகன் இயக்கும் கவிஞர் கிச்சன் என்ற படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஹெல்த் ஆபீசர் வேடத்தில் நடிக்கிறார் பேரரசு. புதுமுகங்கள் ஜோடி சேரும் இந்த படத்தில் பேரரசுவுடன் ஆனந்த ராஜ், கஞ்சா கருப்பு, மன்சூரலிகான் உள்பட பலர் நடிக்க, எஸ்.என்.அருணகிரி இசையமைக்கிறார். மதன்கார்க்கி, ஞானக்கரவேல், ஜெயங்கொண்டான் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருளினால் அதை சாப்பிடும் மக்கள் எந்தெந்த வகையில் பாதிக்கப்படு கிறார்கள். அதை ஹெல்த் ஆபீசரான பேரரசு கண்டுபிடித்து எவ்வகையில் மக்களை காப்பாற்றுகிறார் என்பதுதான் கதையாம். முதல் பாதியில் காமெடியாகவும், இரண்டாவது பாதியில் சீரியசாகவும் இப்படத்தின் கதை உருவாகிறது.