ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
சிவாஜி, பத்மினி ஜோடிதான் அந்தக் காலத்தில் மேட் ஃபார் ஈச் அதர் ஜோடி. இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தால் காதல் கனிரசம் பொங்கும். ஆனால் இதற்கு நேர்மாறாக அமைந்தது எதிர்பாராதது என்ற படம். 1954ம் ஆண்ட வெளிவந்த இந்தப் படத்தில் சிவாஜி, பத்மினி, நாகய்யா, எஸ்.வரலட்சுமி, சகஸ்ரநாமம் நடித்திருந்தார்கள். சி.என்.பாண்டுரங்கன் இசை அமைத்திருந்தார். ஸ்ரீதர் கதை, வசனம் எழுதியிருந்தார். நாராயணமூர்த்தி இயக்கி இருந்தார்.
இந்த படத்தின் கதை புரட்சிகரமானது. சிவாஜியும், பத்மினியும் கருத்தொருமிக்க காதலர்கள். எதிர்பாராத விதமாக இருவரும் பிரிந்து விடுகிறார்கள். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறபோது சிவாஜி, பத்மினியை இன்னும் காதலித்து கொண்டிருக்கிறார். பத்மினி ஒரு வயதானவருக்கு இரண்டாந்தாரமாகி இருக்கிறார். அந்த வயதானவர் சிவாஜியின் தந்தை. இப்போது பத்மினி, சிவாஜிக்கு சித்தி. இதனை சிவாஜி ஏற்கவில்லை. அவர் மீது காதல் மிகுதியால் ஒரு நாள் காதல் உணர்வோடு அவரை தொட்டுவிடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத பத்மினி அவரை சகட்டுமேனிக்கு அடிக்க வேண்டும் என்பது காட்சி.
முதலில் பத்மினி நடிக்க மறுத்தார். திட்டுவது போல காட்சியை மாற்றுங்கள் என்றார். ஆனால் இந்த காட்சிதான் படத்திற்கே ஜீவாநாடி நான் உன் காதலி இல்லை. உன் அம்மா என்று சிவாஜிக்கு புரிய வைக்கிற காட்சி என்று பத்மினிக்கு எடுத்து சொன்னார்கள். சிவாஜி பல ஆங்கிலப் படங்களில் ஹீரோயின், ஹீரோவை அடிக்கிற காட்சிகளை போட்டுக் காட்டி "இப்படி நடிக்க வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் அடி நான் தாங்கிக் கொள்கிறேன். எவ்வளவுக்கெவ்ளவு ஆக்ரோஷமாக அடிக்கிறாயோ அந்த அளவிற்கு இந்தப் படம் வெற்றி பெறும். உனக்குள் ஒரு வெறியை ஏற்படுத்திக் கொள்" என்று கூறினார்.
மறு நாள் காட்சி படமானது... சிவாஜி பத்மினியை தவறான நோக்கத்தில் தொடுவார். கோபமாக திரும்பும் பத்தினி, சிவாஜி கன்னத்தில் மாறி மாறி அறைவார். இதில் உண்மையாகவே சிவாஜிக்கு கன்னம் வீங்கியது கண்கள் வழியாக ரத்தம் கொட்டியது இதை பார்த்த அதிர்ச்சியில் அப்படியே மயங்கி சாய்ந்தார் பத்மினி. அடிவாங்கிய சிவாஜி கீழே விழுந்து கிடக்க... அடித்த பத்மினியை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்தரிக்கு ஓடினார்கள். இரண்டு நாட்கள் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த ஒரு காட்சிக்காகவே எதிர்பாராதது படம் வெற்றி பெற்றது.