ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தேவி, கத்திச்சண்டை படங்களுக்குப்பிறகு சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் ரம்யா என்ற கேரக்டரில் நடித்துள்ள தமன்னா, அதையடுத்து பாகுபலி-2வில் முதல் பாகத்தில் நடித்த அவந்திகா வேடத்தில் மீண்டும் நடித்துள்ளார். இதில் பாகுபலியில் புரட்சிகரமான வேடம் என்ற போதும், சிம்புவின் டிரிபிள் ஏ படத்தில் கவர்ச்சிகரமான ரோலில் நடித்துள்ளார் தமன்னா. அதையடுத்து புதிய பட வாய்ப்புகளுக்கான முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்த போதுதான் வாலு விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படவாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
மேலும், இந்த படத்தில் நடிக்க முதலில் சாய் பல்லவிதான் ஒப்பந்தமாகியிருந்தார். பின்னர் அவர் விலகியதால் அடுத்து தமன்னா ஒப்பந்தமானார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் போடப்பட்டுள்ள செட்டில் நடந்து வருகிறது. மேலும், இந்த படம் வடசென்னை கதையில் தயாராகி வருவதால், தமன்னா ஸ்லம் ஏரியா பெண்ணாக நடிப்பதாக ஒரு செய்தி கசிந்து வந்தது. ஆனால் இப்போது அதுகுறித்து விசாரித்தால் தமன்னா அந்த படத்தில் ஆட்சாரமான பிராமிண் பெண்ணாக நடிப்பதாக சொல்கிறார்கள்.