ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பட்டதாரி படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதிமேனன். கேரளத்து வரவான இவர் அதையடுத்து பட்டதாரி பட நாயகன் அபி சரவணனுடன் நாங்களெல்லாம் வேலைக்கு போயிட்டா ஊர யாரு பாத்துக்கிறது -என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். என்றாலும், பட்டதாரியில் நடித்து வந்தபோதே அமீரின் சந்தனத்தேவன் படத்தில் ஒப்பந்தமாகி விட்டதால் அந்த படத்தில் நடித்து முடித்த பிறகுதான் அபிசரவணனுடன் நடிக்கிறாராம் அதிதிமேனன்.
மேலும், கடந்த ஒரு வாரமாக சந்தனத்தேவன் படப்பிடிப்பு தேனியில் நடிந்து வரும் நிலையில், பிப்ரவரி 21-ந்தேதி முதல் அப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் அதிதி மேனன். அதோடு, இந்த படத்தில் தனக்கான கேரக்டர் என்ன என்பதே இன்னமும் தெரியாது என்று கூறும் அவர், ஸ்பாட்டிற்கு சென்ற பிறகுதான் கதையும், நான் நடிக்கும் கதாபாத்திரமும் எனக்கே தெரிய வரும் என்று கூறும் அதிதி மேனன், சந்தனத்தேவனில் பிப்ரவரி 21-ந்தேதி தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை நடிக்கயிருப்பதாக சொல்கிறார்.