ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அனேகன் படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படம் கவண். எழுத்தாளர் சுபா எழுதிய கதை. விஜய் சேதுபதி, மனோடா செபாஸ்டின், டி.ராஜேந்தர், விக்ராந்த், பாண்டியராஜன், போஸ் வெங்கட், நண்டு ஜெகன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள் ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைத்திருக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் தயாரித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியதாவது:
கவண் ஒரு மாஸ் எண்டர்டெயின்மெண்ட் மூவி. இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ற படம். காதல், மோதல், அவமானம், மீண்டெழுதல், கொண்டாட்டம் இவற்றை உள்ளடக்கிய சுவாரஸ்ய சினிமா. விஜய் சேதுபதியை முற்றிலும் புதிக பரிமாணத்தில் காட்டுகிறோம். இந்த ஆண்டின் கணக்கை அவர் கவணுடன் தொடங்குகிறார். டி.ராஜேந்தரை அவர் போக்கிலேயே அடுக்கு மொழி பேசி நடிக்க வைத்து அதனை எங்கள் கதைக்கு சரியாக பொருத்தியிருக்கிறோம். விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் கலவை நீண்ட நாட்களுக்கு பேசப்படும். மடோனாவின் இயல்பான நடிப்பு படத்துக்கு பலம் சேர்க்கும்.
மகாகவி பாரதியின் பாடலில் இருந்து ஹேப்பி நியூ இயர் பாடல் வரை வெரைட்டியான பாடல்களை கொடுத்திருக்கிறார் ஹிப் ஆப் தமிழா ஆதி. பல பாடல்கள் இப்போது ஹிட் அடித்திருக்கிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் படம் உருவாகியிருக்கிறது. படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. விரைவில் மக்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம். என்றார் கே.வி.ஆனந்த்.