ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இன்றைக்கு சூப்பர் ஸ்டார் நடிக்கும் 2.ஓ 400 கோடி ரூபாயில் தயாரிக்கப்படுகிறது. பாகுபலி படம் 300 கோடியில் தயாரிக்கப்படுகிறது. இந்த பிரமாண்டங்களுக்கு முன்னோடியான படம் சந்திரலேகா எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை 40 லட்சம் ரூபாய் செலவில் தயாரித்தது. இரண்டு ஆண்டுகள் படப்பிடிப்பு நடந்தது.
ஆனால் முதல் பெரிய பட்ஜெட் பிரமாண்ட படம் என்றால் அது 1942ல் வெளிவந்த மனோன்மணி. மார்டன் தியேட்டர்ஸ் சார்பில் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய படம். 10 முதல் 15 ஆயிரம் செலவில் படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் 2 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம். இன்றைய மதிப்பில் 200 கோடி என்று கொள்ளலாம்.
இந்தப் படத்தில் பி.யூ.சின்னப்பா ஹீரோவாகவும், டி.ஆர்.ராஜகுமாரி ஹீரோயினாகவும் நடித்தனர். இவர்கள் தவிர செருகளத்தூர் சாமா, டி.எஸ்.பாலையா, டி.ஆர்.மகாலிங்கம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடித்திருந்தனர். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய கதை. கல்யாணம்&மகாதேவன் என்ற இரட்டையர்கள் இசை அமைத்திருந்தனர். சுமார் 150 படங்களை தயாரித்த மார்டன் தியேட்டர்ஸ் அதிக பொருட் செலவில் தயாரித்த படம் 1947ல் வெளிவந்த ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி. என்றாலும் முதல் பிரமாண்ட பட்ஜெட் படம் என்ற தகுதி மனோன்மணிக்கே உரித்தானது.