ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சி-3' படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ளது சி-3. இந்தப்படத்தை காலை 11 மணிக்கு நேரடி ஒளிபரப்பாக வெளியிட இருப்பதாக தமிழ்ராக்கர்ஸ் இணயதளம் பகிரங்கமாக சவால்விட்டது. அதன் காரணமாக தியேட்டர் காரர்கள் அச்சத்தில் உறைந்து இருந்தனர்.
இந்நிலையில், தியேட்டருக்கு சென்று படம் பார்க்குமாறு தன்னுடைய ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் சூர்யா. சிங்கம்-3 படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் என்று நம்புகிறேன். உங்களின் அன்பு மற்றும் ஆசீர்வாதத்திற்கு நன்றி, இதுக்கெல்லாம் நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தவே பத்தாது. அனைவரும் தியேட்டருக்கு சென்று படத்தை பாருங்கள் என எனது பணிவான வேண்டுகோளை வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க, சி-3 படத்தை லைவ்வாக வெளியிடுவதாக அறிவித்த தமிழ்ராக்கர்ஸ், பேஸ்புக்கில் படத்தின் சில காட்சிகளை வெளியிட்டனர். ஆனால் அது உடனடியாக முடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஞானவேல்ராஜாவுக்கு முதல் வெற்றி கிடைத்திருக்கிறது.