மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் மவுன உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. இதில் ரஜினி, கமல், அஜித், விஜய், நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால், மீடியாக்களின் கவனம் நடிகர்களின் உண்ணாவிரதம் நோக்கி திரும்பும். இது மாணவர்களின் போராட்ட உணர்வை சிதைக்கும் என்று பரவலான விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் எங்கள் உண்ணாவிரத்தை ஒளிபரப்ப வேண்டாம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் டி.சி.சேனல்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இன்று தமிழக எல்லைக்குள் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவிகிடக்கும் மக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கி இருக்கிறார்கள். முதுபெரும் தமிழ்க்குடியின் ஒரு கலாச்சார சின்னம் முடக்கப்பட்டுக்கிடக்கிறது. அதை மீட்டுக் கொண்டு வர தன்னிச்சையாய் தன்னார்வத்தோடு அலைகடலென மாணவர் சமுதாயமும், இளைஞர்களும் ஒன்று சேர்ந்து போராடுகின்றனர். அவ்வெழுச்சியினால் ஈர்க்கப்பட்டு பெண்களும், குழந்தைகளுமாய் வீதி இறங்கி பங்குபெறுகின்றனர்.
இம்மாபெரும் போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையான ஆதரவைத் தருகிறது. வெறும் பேச்சுக்களால் அல்லாமல் மவுனத்தை மொழியாய் கொண்டு “மவுன அறவழி அமர்வை” நடத்துகிறது. நடிகர் சமூகம் மட்டுமின்றி பல்வேறு துறை சார்ந்தோரும் கலந்து கொண்டு ஆதரவை வெளிபடுத்த போகின்றனர். யாரும் கருத்துகளை , ஆலோசனைகளை வெளிபடுத்த போவதில்லை. அதனால் எங்களது இந்த நிகழ்வை டி.வி மற்றும் இணையதள நண்பர்கள் வீடியோ கவரேஜ் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்
அதற்கு பதிலாக, உண்மையில் இப்போராட்டத்தின் காரணகர்த்தாக்கள் வெட்டவெயிலிலும் பனியிலும் , பசியிலும் சிதறாமல் கூடியிருக்கும் அம்மாணவர்கள் , பல்துறை சார்ந்த இளைஞர்கள் அவர்கள் தான் மக்களால் அறியப்பட வேண்டியவர்கள் , அவர்கள் கருத்துகள் தான் கேட்கப்பட வேண்டியவை. ஆகவே ஊடக நண்பர்களே அங்கு நடப்பவைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். இன்றைய சூழலில் யாரை முன்னிறுத்த வேண்டுமோ அவர்களை முன்னிறுத்துவோம். இது நம்கடமை என்ற வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.