ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகத்தில் அதிதீவிரம் அடைந்துள்ளது. மாணவர்கள் தொடர்ச்சியாக மாநிலம் முழுக்க போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு குரல் கொடுத்து வரும் சிம்பு நேற்று தன் வீட்டு முன்ன போராட்டத்தில் ஈடுபட்டார். இரவில் தனது வீட்டு வெளியே ரோட்டில் உறங்கினார். அவருடன் நூற்றுக்கணக்கான ரசிகர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனது ஆதரவாளர்களிடம் சிம்பு பேசுகையில்... ‛‛ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க சென்னைக்கு ராணுவம் வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்கள் மீது கை வத்தால் அது மிகப்பெரிய பாவம். அவர்களை காக்க வேண்டியது நம் கடமை. எனவே நாம் செய்ய வேண்டியதெல்லாம் போராட்ட களத்தில் இருப்பவர்களுக்கு உடனடியாக தேசிய கொடியை அளிக்க வேண்டும். தேசிய கொடியை மேலே போர்த்தி கொண்டால் எப்படி அவர்கள் அடிப்பார்கள், ராணுவே வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்களது போராட்டம் தொடரும்'' என்று கூறியுள்ளார்.