ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
22 வயது புதுமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, 3வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டும் இருக்கிறது. ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை இதுவரை யாரும் கையாளாத திரைக்கதையில் சொன்ன விதத்தில் மிகப்பெரிய இயக்குனர்களையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் கார்த்திக் நரேன். இளைஞர்களை நம்பி அவர்களுக்கு சிறப்பாக நடித்துக் கொடுத்த ரகுமானும் பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் துருவங்கள் பதினாறு படம் தெலுங்கிலும், இந்தியிலும் ரீமேக் ஆக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தெலுங்கு மற்றும் இந்தியில் பல முன்னணி நிறுவனங்கள் படத்தின் ரிமேக் உரிமம் கேட்டு கார்த்திக் நரேனை அணுகி உள்ளன. இதுகுறித்து கார்த்திக் நரேன் கூறும்போது:
தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் உரிமம் கேட்டு சில நிறுவனங்கள் அணுகி இருக்கிறது. அது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை. சிலர் ரீமேக்கையும் என்னை இயக்கச் சொல்கிறார்கள். ஆனால் நான் எனது அடுத்த படத்தில் பிசியாகிவிட்டேன். அடுத்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வில் இருக்கிறேன். ஜூலை மாதம் புதிய படத்தின் துவக்கம் இருக்கும். இரண்டு முன்னணி நிறுவனங்கள் இந்தி உரிமம் கேட்டிருக்கின்றன. இது தொடர்பான எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. என்கிறார் கார்த்திக் நரேன்.