ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
குற்றமே தண்டனை படத்திற்கு பிறகு அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் விதார்த். குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு, கடோத் கஜன், வண்டி, பில்லா பாண்டி, 88 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் குரங்கு பொம்மை, வண்டி படங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு கிடாயின் கருணை மனு படப்பிடிப்பு முடிந்து திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏற்கனவே விதார்த் நடித்து வருடக்கணக்கில் வெளியாகாமல் இருக்கும் படங்களில் ஒன்றான விழித்திரு படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவன் இயக்கிய இந்த படத்தில் விதார்த்துடன் கிருஷ்ணா, தம்பிராமைய்யா, தன்ஷிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விதார்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் திருடன் வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படத்திற்கு எதிர்பார்த்தபடி யு சான்றிதழ் கிடைக்கவில்லையாம். மூன்று முறை தணிக்கைக் குழுவினருக்கு திரையிடப்பட்ட அப்படம் தற்போது ரிவைசிங் கமிட்டிக்கு சென்றிருக்கிறது.