ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்ற உறுதியில் இருக்கிறார்கள் தமிழர்கள். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை, அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி ஏராளமான மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தினர்.
இந்தப்போராட்டத்தில் இயக்குநர் அமீர், நடிகர் ஆர்யா, அவரது தம்பி சத்யா மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரும் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவிக்க வந்ததனர். ஆனால் ஆர்யா, பீட்டாவிற்கு ஆதரவானவர் என்று கூறி சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இவர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
அமீர், ஆர்யா, யுவன் கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சிறு தடியடி நடத்தி கலைத்தனர். இதில் இயக்குநர் கெளதமன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதின் போது இயக்குநர் கெளதமனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஆர்யா தற்போது அமீர் இயக்கத்தில் சந்தனதேவன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப்படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.